Journalist Aashik Signature
Journalist Aashik Signature
May 23, 2025 at 04:22 PM
டாஸ்மாக் விவகாரம் முதலில் இரண்டு averments: 1. டாஸ்மாக்கில் திமுக ஊழல் செய்திருக்குமா..? சர்வ நிச்சயமாய் ஊழல் செய்திருக்கும்..! 2. டாஸ்மாக்கில் அதிமுக ஊழல் செய்திருக்குமா..? சர்வ நிச்சயமாய் செய்திருக்கும்..! Now : அமலாக்கத்துறை என்ன செய்கிறது டாஸ்மாக்கில்..? போலீஸில் சிலர் கம்ப்ளெயிண்ட்ஸ் : "இந்தக் கடையில் MRP விட அதிகமா வாங்கினான்.." "இவன் ஹாஃப் கட்டிங் காசு வாங்கிட்டு குவார்ட்டர்தான் கொடுத்தான்.." "தப்பான பிராண்ட் விஸ்கி கொடுத்துட்டான், போதையே இல்ல..." இப்படியானவை.! இதுபோல 2017லிருந்து 40 போலீஸ் கேஸ்கள். கவனியுங்கள்: 2017லிருந்து..! சொல்லுங்கள் : மிகப் பெரிய குற்றங்களை விசாரிக்க வேண்டிய அமலாக்கத்துறை, மிகக் கடுமையான PMLA சட்டத்தை உபயோகிக்கத் தோதான விவகாரமா இது..? இது போலீஸ் அல்லது CBI கவனிக்க வேண்டிய விஷயம். PMLA என்பது மிக மிக சீரியஸான, நாட்டைப் பாதிக்கும் குற்றங்களுக்கான விசேஷச் சட்டம்..! டாஸ்மாக்கில் குவார்ட்டர் கட்டிங் பற்றி விசாரிக்க அல்ல..! அப்புறம் ஏன் ED அதற்குள் சென்றது..? ஏனென்றால் : ED தன்னிச்சையாக ஒரு கேஸைப் போட முடியாது..! ஏற்கனவே ஒரு போலீஸ் கேஸ் இருந்து, அதில் சட்டவிரோத பணப் பரிமாற்ற்ம இருப்பதாகத் சந்தேகம் இருக்கு என்று சொல்லி, ED அதைக் கையில் எடுக்கலாம்..! டாஸ்மாக்கிற்குள் ED நுழைய வேண்டும் என்பதால், அந்த 40 சில்லறைக் கேஸ்களை 'சட்ட விரோத பணப் பரிமாற்றம்' என விசாரிக்கப் போச்சாம்..! டாஸ்மாக் ஹெட் ஆபிஸ் உள்ளே செல்கிறது ED..! போய், இரவு பகலாய் மூன்று நாட்கள் அந்த ஆபீஸையும் அங்கிருக்கும் ஊழியர்களையும் தலைகீழாய் புரட்டிப் போட்டு சோதனை..! அதில், 'வேறு சில ஊழல்களைக் கண்டுபுடிச்சோம், 1000 கோடி ஊழல்.!' என்று அறிவிக்குது ED..! அதெப்படி FIR போடாமயே 1000 கோடின்னு சொன்னாங்க..? எலக்க்ஷன் பாண்ட் மேட்டர்ல, 15000 கோடி ஊழல் என்பதை சுப்ரீம்கோர்ட்டே தலையிட்டு, , விஷயம் வெளிவந்த பின்னும், ED அந்த சம்பந்தப்பட்ட கம்பெனிகளை விசாரிக்க முனையவே இல்லை என்பதையும் Vs. இந்த டாஸ்மாக் சில்லறைக் கேஸில் ED காட்டும் தீவிரத்தையும் ஒப்பிடுங்கள். உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா..? நாடெங்கிலும் பல லட்சம் கோடி money laundering அசால்ட்டா தினம் நடந்து கொண்டிருக்க, அதை எதையும் கவனிக்காமல், ED ஏன் இங்கே தன் resourcesஸை செலவிடுகிறது..? 'திமுக 1000 கோடி ஊழல், 1000 கோடி ஊழல்..!' என்று தினம் நியூஸில் வர வேண்டும்; அதற்காக அமலாக்கத்துறை தன் கௌரவத்தை இழந்தாலும், PMLA சட்டம் தம் மரியாதையை இழந்தாலும் பரவாயில்லை என்று பிஜேபி நினைக்கிறது..! நண்பர்களே..! சுப்ரீம்கோர்ட் நேற்று, இதையெல்லாம்தான், ED யைப் பார்த்து கடுமையாகக் கேட்டிருக்கிறது : "உங்களுக்கென்று இருக்கும் எல்லா வரம்புகளையும் மீறி ஏன் இந்த சில்லறை விஷயத்தில் இவ்வளவு முனைப்பு காட்டினீர்கள்..? தனி மனிதர்கள் மேல் இருக்கும் போலீஸ் கேஸ்களுக்கு, ED விசாரணையா..? ஒரு அராசாங்க ஆபிஸிற்குள் சென்று அங்கிருப்பவர்களை இவ்வளவு harassmentடா..? அரசியல் நோக்கத்திற்காக ED செயல்படுவதா..?" ... என்றெல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கிறது..! சுப்ரீம்கோர்ட், EDயின் டாஸ்மாக் விசாரணக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது..! Of course, இது இறுதித் தீர்ப்பல்ல..! ஆனால்.... *அமலாக்கத்துறையின் மாண்புக்கு, பிஜேபி இறுதிச் சங்கு ஊதி விட்டது.!* *இனி அமலாக்கத்துறைக்கு மரியாதையே இருக்காது..!✍🏼🌹* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
Image from Journalist Aashik Signature: டாஸ்மாக் விவகாரம்  முதலில் இரண்டு averments:  1. டாஸ்மாக்கில் திமுக ஊழ...
👍 1

Comments