Journalist Aashik Signature
Journalist Aashik Signature
June 10, 2025 at 07:42 AM
*அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!* “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் எழுதிய பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியூட்டப்பட்டது. தற்போது RSS வானரக்கூட்டங்களால் உண்மையாகவே எரியூடப்படும் அபாயத்தில் மதுரை உள்ளது. *அதற்காகத்தான் காவிப் பாசிஸ்ட்டுகள் முருக பக்தர்கள் மாநாட்டை கூட்ட உள்ளனர்.* அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மதுரையில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி ஜூன் 22 ல் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும்தான் இம்மாநாடு என்கின்றனர். இதை நம்பலாமா? மாநாட்டிற்கான பூமி பூஜை மதுரை வண்டியூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மே 28 இல் நடந்தது. கோ பூஜையுடன் தொடங்கிய விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு பந்தலின் மாதிரியை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். *வானரக்கூட்டங்களுக்கு கூடுவதற்கு ஒரு காரணம் தேவை. வடக்கே ராமர் கோயிலை மீட்க என்றனர்; தெற்கே முருகனை காக்க என்கின்றனர்.* *ராமன் சங்கிகளுக்கு துணை நின்றானென்றால் முருகனும் அப்படி நிற்க முருக தமிழ் முருக பக்தர்கள் விடுவார்களா?* *அப்படி ஒருபோதும் நடக்காது என்பதால்தான் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேரை திரட்ட மோடி அமித்ஷா கும்பல் திட்டமிட்டுள்ளது.* கலவரத்துக்கு கால்கோள்! ”மதுரை ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள காலியிடத்தில் மாநாட்டுக்கான அரங்கம் அமையவுள்ளது. மாநாட்டிற்கு 3 நுழைவு வாயில்கள் மீனாட்சி, அழகர், திருப்பரங்குன்றம் கோயில் வடிவில் அமைக்கப்படும். அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரம், மூலவர் அமைக்கப்படும். ஒவ்வொரு மாதிரி கோயிலிலும் அக்கோயில் பிரசாதம் வழங்கப்படும். இந்த அறுபடை வீடு கோயில்கள் மாநாட்டிற்கு 10 நாள்கள் முன்பு திறக்கப்படும். பொதுமக்கள் தரிசிக்கலாம்” என்றெல்லாம் பரவசப்படுகிறது தினமலர். *இப்படித்தான் பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்து கரசேவைக்குப் பக்தர்களை அழைத்தார்கள். ராம பக்தர்கள் ஏமாந்து சென்றனர். அவர்களின் பெயரால் நாடெங்கும் கலவரங்களும், படுகொலைகளும் நடந்தபோது, மசூதி இடிக்கப்பட்டபோது கையறு நிலையில் கையாலாகாத ராமனிடம் முறையிட்டு மனம் வெம்பினர். இது முருக பக்தர்களுக்கு நன்றாகவே தெரியும்.* மதுரையை கண்டால் அச்சம்! சமஸ்கிருதத்தை மட்டுமின்றி சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியையும் தமிழ்நாடு அடித்து விரட்டியுள்ளது. 1965 இல் காங்கிரசாரால் திணிக்கப்பட்ட இந்தியை தினவெடுத்த தோள்களால் தமிழக இளைஞர்கள் மோதி வீழ்த்திய களம்தான் மதுரை. *தமிழுக்கு சங்கம் வளர்த்த ஊரும் இதே மதுரைதான். மதுரையின் கீழடி அகழாய்வை கண்டும் காவிகள் கதறுகிறார்கள். தொல்லியல் சான்றுகள் மூலம் தான் மூத்தகுடி என்பதை தமிழன் தலைநிமிர்ந்து சொல்ல விடக்கூடாது என சதிகளை செய்து மீண்டும் மதுரையை புதைக்க துடிக்கிறது காவிக்கும்பல்.* காவிகளின் எஜமானர்களையும் அச்சுறுத்துகிறது மதுரை. டங்ஸ்டன் வெட்ட வந்த வேதாந்தாவை அரிட்டாப்பட்டியில் கூடிய மக்கள் மதுரைக்கு பேரணியாக வந்து தமிழகத்திலிருந்து அடித்து விரட்டி ஓராண்டு கூட ஆகவில்லை. இதனால் மதுரையை எரிக்க காவிகளுடன் கார்ப்பரேட்டுகளும் கள்ளக்கூட்டும் சேர்ந்துள்ளனர். மாநாட்டின் புரவலர்களாகவும் அனில் அகர்வால் உள்ளிட்ட தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளே இருப்பர். தடையாய் மறிக்கும் மத நல்லிணக்கம்! அரிட்டாப்பட்டியை விழுங்க வந்த அனில் அகர்வாலின் ஹிந்துஸ்தான் ஜின்க்கை விரட்ட ”டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டமைப்பு” உருவெடுத்ததுபோல், திருப்பரங்குன்றத்தில் முருகனை வைத்து கலகத்தை தூண்ட வந்த காவி பாசிஸ்டுகளை விரட்ட ”மத நல்லிணக்க கூட்டமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 2 இல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *இந்த மாநாட்டுக்காக சங்பரிவார் அமைப்பினர் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை மிக நுட்பமாக பரப்பும் விதத்தில் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றனர்.* இந்த சங்பரிவார் அமைப்பினர் கடந்த பிப். 4-ல் 144 தடையாணை அமலில் இருந்தபோது பாஜக கொடியை மறைத்து எடுத்துச் சென்று திருப்பரங்குன்றம் கோயிலில் புகுந்து கலவரம் செய்ய முயன்றனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தும் இதுவரை கலவரம் செய்தவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. *வட மாநிலங்களில் ராமர் பெயரால் மத வன்முறையை நடத்தி வரும் அதே இயக்கங்கள் ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மத வெறுப்பை, வன்முறையை விதைக்க தயாராகி வருகின்றனர்.* மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இதுவரை போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் சங்பரிவார் அமைப்பினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை போலீஸார் எப்படி அனுமதிக்கின்றனர்? மதுரையில் சங்பரிவார் அமைப்புகள் நடத்தும் மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, ஆன்மிகத்தின் பெயரில் நடத்தப்படும் அரசியல் மாநாடு. எனவே அமைதி பூங்காவான தமிழ்நாடும், மத நல்லிணக்க மாநகரமான மதுரையும் குஜராத், உத்திரபிரதேசம் போல் மாறாமல் இருக்கு ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறியுள்ளனர் என்கிறது இந்து தமிழ்திசை. *’எரியூட்டப்படும்’ அபாயத்தில் மதுரை!* எந்த பார்ப்பான் காவடி தூக்கி பாதயாத்திரை வந்துள்ளான்? பால்காவடி, பறவைக்காவடி எடுத்து வரும் முருக பக்தர்களே உங்கள் பெயரால் ஒரு கூட்டம் உள்நுழைகிறது. முருகனின் பெயரைக்கூட தீட்டென்று ஒதுக்கி தமது குழந்தைகளுக்கு சுப்ரமணியன், ஷண்முகன் என்று பெயரிட்டுள்ள தமிழக பார்ப்பனக் கும்பலும், முருகனுக்கு தொடர்பே இல்லாத வடமாநில பார்ப்பன கும்பலும் கலவரத்துக்காகவே நாள்குறித்து களமிறங்கியுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்களின் போர்வையில் ஊடுருவும் காவி பாசிஸ்ட்டுகள் தம்மைத்தாமே தாக்கிவிட்டு – தமிழக முஸ்லீம்களின்மேல் பழிபோட நாடகமாடியதை நாம் பார்த்துள்ளோம். கீழ்த்தரமான சதிகளின் மூலம் ஆட்சியதிகாரத்தை பிடிப்பதில் காவி பாசிஸ்ட்டுகளுக்கு இணையே இல்லை. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ‘புல்வாமா பாணி’யில் அப்பாவி பக்தர்களை பலிதருவதற்கும் தயங்காத கூட்டம் இது. முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு போய் காந்தியை சுட்ட கோட்சேயின் வாரிசுகளுக்கு, தலையில் குல்லாய் அணிந்து வந்து கல்லெறிவதுகூட சாத்தியமானதுதானே! மதுரை எரிந்தால் திராவிடத்தை எரித்ததாகுமல்லவா? வேதாந்தாவை குளிர்விக்க உதவுமல்லவா? கீழடியை புதைக்க வாய்ப்பு கிடைக்குமல்லவா? எனவே பாசிஸ்டுகளை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம். *தமிழகமே விழித்தெழு!* அயோத்தி பார்முலாவில் மதுரா, காசி என பெருங்கனவுடன் வெறியுடன் களமிறங்கியுள்ளனர் காவி பாசிஸ்டுகள். நெற்றியில் செந்தூரத்துடன், கையில் சூலத்துடன் இந்துமதவெறி ரேபிசை பரப்பும் வெறிநாய்கள் தெருவில் வலம் வரப்போகின்றன. ஜூன் 22-ல் காவி பாசிஸ்ட்டுகளின் மாநாட்டை நடத்த விடலாமா? மதக்கலவரங்களுக்காக ஒன்றிய அரச பயங்கரவாதிகளின் துணையுடனும், இந்துராஷ்டிரம் அமைக்கும் பெருங்கனவுடனும், கார்ப்பரேட் சேவைக்காகவும்தான் ஒன்று கூடுகிறார்கள். *பெரியாரின் மண்ணில் வாலில் நெருப்புடன் கூடப்போகும் இந்த வானரக்கூட்டத்தின் வாலை நறுக்குவது எப்படி? விருப்பம்போல் தீ வைக்க தமிழகம் ராமாயணத்தில் வரும் இலங்கை அல்ல என்பதை நிரூபிப்பது எப்படி? முருக பக்தர்களே, தமிழக மக்களே பாடம் புகட்ட சிந்திப்பீர்.* இளமாறன் https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
Image from Journalist Aashik Signature: *அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்...
👍 ❤️ 3

Comments