Para
June 2, 2025 at 02:14 PM
*மிருது மதிப்புரைப் போட்டி*
> நடுவர் கதிரவன் ரத்தினவேலின் தீர்ப்பு
---
800 சொச்ச மெயில்களை சலித்தெடுத்ததில் 40 நாட்களும் மதிப்புரை எழுதியிருப்போர் ஐவர். ஐவருக்கும் தனியான பாராட்டுகள். 40 நாட்கள் தொடர்ந்து வாசிப்பதே இக்காலத்தில் பெரும் சாதனை எனும்போது 40 நாட்களும் எழுதியிருக்கிறார்கள். அது உண்மையில் பெரிய விசயம்தான்.
அடுத்தபடியாக 22 நாட்கள் மட்டும் ஒருவர் மதிப்புரை எழுதியிருந்தார். 30 நாட்களுக்குக கீழிருந்ததால் அதனை எடுக்கவில்லை. மற்றவை 20 நாட்களுக்கும் கீழ்தான்.
தரவரிசைப் பட்டியல் இதோ:
1. சிகரம் பாரதி - Letchumanan
[email protected]
2. வளநாடு சேசு
[email protected]
3. வினோத்குமார் சுப்பிரமணியன்
[email protected]
4. சுதா சத்யா
[email protected]
5. பாபநாசம் நடராஜன்
[email protected]
சமூக வலைத்தளங்கலில் புத்தக மதிப்புரை எழுதுவோருக்கே இயல்பாய் ஓரு தயக்கம் இருக்கும். எழுத்தாளரோ பதிப்பாளரோ பார்த்து கோபித்துக் கொள்வார்களோ என்று தயங்கித் தயங்கி எழுதுவார்கள். அதிலும் நேரடியாக எழுத்தாளருக்கே அனுப்புகையில் மதிப்புரை உரையாடலாகி விடுவதற்கான வாய்ப்பே அதிகம். அவ்வகையில் சிகரம் பாரதி அதிலிருந்து விலகியிருக்க நிரம்ப மெனக்கெட்டுருக்கிறார். மேலும் முதல் மூன்று இடங்களிருக்கும் நபர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாக சிலமுறை வாசித்து குறிப்பெடுத்தாற்போல பிடித்தவற்றை குறிப்பிட்டுருந்ததை கவனிக்க முடிந்தது.
ஒப்பீட்டளவில் நுட்பமாக வாசித்தோர், அதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருப்போர், முக்கியமாக அதனை வெளி விசயங்களுடன் ஒப்பிட்டு ரசித்திருப்பதைக் கொண்டே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
கதிரவன் இரத்தினவேல்
----
வென்றவர்களுக்கு வாழ்த்துகள். கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. பரிசுக்குரிய ஐவரும் [email protected] மின்னஞ்சலுக்குத் தத்தமது முகவரியை (தொலைபேசி எண்ணுடன்) அனுப்பி வைக்க வேண்டுகிறேன். மிருது புத்தக வடிவம் பெறும்போது பிரதி அனுப்பிவைக்கப்படும்.
பாரா/
❤️
❤
👍
🙏
14