Para
June 3, 2025 at 05:56 AM
நீ வேறு, நான் வேறு - 12 பலூசிஸ்தான் வரலாறு - மெட்ராஸ் பேப்பர் வாசிப்பு அனுபவம் பலூசிஸ்தான் மக்கள் எப்போதும் தங்களை தனி இனமாகவும், தனி நாட்டு மக்களாகவும் தான் உணர்ந்து வந்திருக்கிறார்கள். எத்தனை அடக்குமுறைகளை பிரிட்டிஷ் இந்திய அரசு மேற்கொண்டாலும் கூட, அத்தனையையும் பொறுத்துக் கொண்டு, பிரிட்டன் தம் மண்ணை விட்டு வெளியேறும் நாளுக்காகக் காத்திருந்திருக்கிறார்கள் பலூச்சிகள். அன்று பிரிட்டன், இன்று பாகிஸ்தான். அவ்வளவுதான் அவர்களுக்கு. இருவருமே தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டவர்கள் தான். பலூசிஸ்தான் மக்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் சுதந்திரத் தாகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது. சற்று எண்ணெய் எடுத்து விட்டுப் பார்ப்பது என்று பிரிட்டன் அரசு நினைத்து சிற்றரசர்கள் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பியது. ஆனால் அழைப்பு வந்த புறாவை பலூசிஸ்தான் கான் வறுத்துத் தின்றுவிட்டார். ஏற்கனவே பலூசிஸ்தானில் மக்களை பிரித்தாளும் முயற்சியில் தோற்ற பிரிட்டன் இதை நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்காது. அவன் என்ன சொன்னான்? இவர் என்ன செய்தார்? நாளை பார்க்கலாம். இப்படிக்கு சிகரம் பாரதி இலங்கை மலையகத்தில் இருந்து...
❤️ 1

Comments