Para
June 3, 2025 at 01:07 PM
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு, பணிவான வணக்கம். நலமே நிறைக. பல்வேறு புறக்காரணிகளால் எனது வாசிப்பு சற்றே பின் தங்கி இருந்த போது, நமது வாட்ஸ் அப் சேனலில் மிருது நாவல் தொடர் தொடங்கியது. இந்தத் தொடர் , எனது மன அழுத்தங்களைக் குறைத்து, கடந்த காலங்களின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து - எனக்குள்ளே மகிழ்ச்சியையும் வாசிப்பின் உத்வேகத்தையும் தூண்டிச் சென்றது என்பதில் எள்ளளவும் மிகையில்லை. அதற்காக, தனிப்பட்ட முறையில் எனது மனமார்ந்த நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தளம் அமைத்துக் கொடுத்ததற்கும், வாசகர்களை உள்ளன்போடு ஊக்குவிப்பதற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சார்.! மதிப்புரை மற்றும் மீம் போட்டிகளில் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களுக்கும், மதிப்பு மிகு நடுவர்களுக்கும், வாட்ஸ் அப் சேனலில் பயணிக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்! மிக்க அன்புடன், வளநாடு சே.சுப்ரமணியன்.
❤️ 🙏 4

Comments