Para
June 10, 2025 at 02:54 AM
அன்பிற்கினிய பாரா, நீ வேறு நான் வேறு.15-என் பார்வையில் , கலாட் மன்னர் பாகிஸ்தான் எனும் நாடு உருவாக மிகவும் ஆதரவாக இருந்தது தனக்கும் தன் நாட்டிற்கும் ஆதரவாக இருக்கும் என நம்பினார், மேலும் ஜின்னா மேல் அவர் கொண்ட நட்பு அவரை அந்த முடிவிற்கு தள்ளியது, ஆனால் பலூச்சிகளோ அவரது முடிவினை ஏற்க தயாராக இல்லாதது மிகப்பெரிய திருப்பமாகும், பாகிஸ்தான் உருவாகிய பிறகு அது முஸ்லீம் நாடாகவும் ,அண்டை நாடாகவும் ,தனது நண்பர் ஜின்னா வும் இருந்ததால் பலூசிஸ்தான் விடுதலைக்கு அது பேருதவியாக இருக்குமென மன்னர் நினைத்தார்,அது மக்களுக்கு புரியாமல் போனதும் ,அவர்கள் தம் நாட்டின் பூரண சுதந்திரத்தை விரும்பியதும் ஏன் என மன்னரால் ஊகிக்க முடியாதது பெரும் பின்னடைவே , மன்னரின் பார்வையில் வளர்ச்சி அடையாத பலூசிஸ்தான் நாடு அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவு தேவைபட்டது,மக்களோ வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்யசொன்னார்கள், மன்னரும் தன்னால் இயன்ற வரை பேசி பார்த்தும் பலனில்லை, பலூச்சிகள் மாறாக மக்களாட்சிக்கு முயன்றது பரிதாபம். அவர்களுக்கும் முழு நம்பிக்கை வந்தது போல தெரியவில்லை, மன்னர் மட்டும் கடிதம் மூலம் பிரிட்டனுக்கு தங்கள் ஒப்பந்தத்தை உயிர்ப்புடன் வைக்குமாறு கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தார், ஆனால் பாவம் பிரிட்டிஷாரோ அவைகளை பிரித்து படித்து கூட பார்க்காமல் நிராகரித்தது அவர்களின் ஆதிக்க மனப்பான்மைக்கு உதாரணமாகும், எவ்வித பதிலும் அளிக்காமல் முடிவும் எடுக்காமல் பிரிட்டிஷார் அவர்கள் தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டனர், இனிவருவனவற்றை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கும் வினோத்குமார் சுப்ரமணியன்.
❤️ 2

Comments