Para
June 11, 2025 at 04:20 AM
அன்பிற்கினிய பாரா, நீ வேறு நான் வேறு .16-என் பார்வையில் , கலாட் மன்னரின் கடித முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராய் ஒருபுறம் வீணாக ,மக்கள் ஒரு புறம் பூரண சுதந்திர நாடாக பலூசிஸ்தான் வேண்டுமென போராட, இதற்கிடையில் பலூச்சிகளின் தலையெழுத்தை முடிவு செய்யக்கூடிய முஸ்லிம் லீக் உருவாகியது, முதலில் ஏதோ முஸ்லிம்களின் உரிமைகளை பெறவும் ,தங்களது வளர்ச்சிக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது தான் முஸ்லிம் லீக் என சொல்லப்பட்டாலும் அது மதசார்பற்ற அமைப்பாக இருந்ததை நம்பமுடியவில்லை, இந்தியர்கள் மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்தது அதைவிட ஆச்சரியம்! எல்லா பிளவுகளும் கேடுகளும் பிரிட்டிஷாராலேயே உருவாக்கப்பட்டு ,வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது, அவர்கள்தான் முதலில் மதத்தை அடீப்படையாக வைத்து வங்காளத்தை மேற்கு ,கிழக்கு என பிரித்துள்ளனர், இந்த பிரிவினையை ஏற்கவும்,மறுக்கவும் முஸ்லீம்கள் இருந்துள்ளனர், முஸ்லீம் லீக் பலூச்சிகளை முஸ்லீமாகவோ ,பலூச்சிகளாகவோ ஏன் மனிதர்களாக கூட ஏற்றுக் கொள்ளாதது பலூச்சிகளின் தனிநாடு கோரிக்கை தோல்விடைய காரணமாக இருந்தது பரிதாபம், பிரிட்டிஷார் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்த்துள்ளனர், அவர்களை வீதிகளில் பார்த்தாலே விசாரனை என அழைத்து சென்று காலவரையின்றி துன்புறுத்தியிருக்கின்றனர் என்பதும் மிக கொடுமை, முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் பொருளாதாரம் ,கல்வியில் பின்தங்கி இருந்தது பாவம், இவர்களது இந்நிலையே இவர்களுக்கு தனியாக ஒரு பல்கலை உருவாக காரணமானது என்பது சற்று ஆறுதல், காங்கிரஸ் மற்றும் லீக் என இருவேறு அமைப்பகளில் இயங்க ஒருவரால் முடிந்திருக்கிறது, காங்கிரஸார் முஸ்லீம்களின் வளர்ச்சி ,அவர்க ளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காததும் ஒரு பெரிய காரணம். வினோத்குமார் சுப்ரமணியன்.
💯 1

Comments