Para
June 11, 2025 at 08:39 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம்,
அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பி சட்டம் படித்தார்களா இல்லை அரசியலுக்கு வந்த பிறகு சட்டம் படித்தார்களா என்று தெரியவில்லை. இங்கு அரசியல்வாதிகள் பெரும்பாலும் சட்டம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.
ஜின்னா பள்ளி படிப்பை முடித்து விட்டு முதலில் குடும்ப தொழிலை கவனித்தார். சிறப்பாகவும் செயல்பட்டார்.
ஆனாலும் சில காலம் கழித்து தன் தந்தையிடம் சட்டம் படிக்கப்போவதாக கூறினார். அவர் சொன்ன காரணம்
" முயன்று பார்க்காமலேயே பிடிக்கவில்லை என்று
சொல்ல விருப்பமில்லை. எனக்கு சட்டம் படிக்க வேண்டும் என்று விருப்பம். இந்தத் தொழில் அவற்றை விஞ்சி என்னை உள்ளே இழுக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. என் விருப்பங்கள் மாறவில்லை. எனவே என்னை என் வழியில் செல்ல அனுமதித்து விடுங்கள். "
இந்த வரிகள் இந்த தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டியவை.
காங்கிரஸ் இயக்கம். ஜின்னாவின் மீது நம்பிக்கை வைத்துதான் முஸ்லீம் லீக் இயக்கத்திற்கு அனுப்பி வைத்தது. அவர் அங்கு சென்றால் இந்து - முஸ்லீம்
ஒற்றுமை மேம்படும் என்றும் நினைத்தது. அவரும்
முஸ்லீம் லீக்கில் சேர்ந்தார். தலைவராகவும் ஆகிவிட்டார். அதன் பிறகு காங்கிரசுடன் செய்து கொண்ட லக்னோ ஒப்பந்தத்தின் விவரம் என்ன
என்பதை தெரிந்து கொண்டால்தான் மற்றவை புரியும்.
பாபநாசம் நடராஜன்
❤️
👍
2