Para
June 11, 2025 at 02:22 PM
கடிதம், பாபநாசம் அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம், என்ன இருந்தாலும் பதவி மோகம் சும்மா விடுமா? இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கொண்டு அதன் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு முஸ்லீம் லீக் இயக்கத்திலும் இணைத்துக் கொண்டவர். மகாத்மா காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தபோது அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தவர். மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று சொன்னவர். கருத்து வேறுபாடு சிறிய விரிசலை ஏற்படுத்தி விட்டது. அதன் தொடர்ச்சியாக மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டங்களின் மீது அதிருப்தி. மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்த சட்டங்களை காங்கிரஸ் எதிர்த்தபோது ஜின்னா அதை ஏற்றுக்கொள்ள முன் வந்து விட்டார். இப்படி விரிசல் சிறிது சிறிதாகிக் கொண்டு வரும் போது. நேரு காங்கிரஸ் தலைவராக்கப்படுகிறார். ஜின்னா தன்னை தேர்ந்தெடுப்பார்கள் என்றல்லவா நினைத்திருக்கிறார். ஆனாலும் நேருவை தேர்ந்தெடுத்ததுதான் சரி என்பதை நேரு தன் குணத்தாலும் செயல்களாலும் நிரூபித்து விட்டார். காந்தி ஒரு தீர்க்கதரிசி அதனால்தான் "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" என்பதற்கு ஏற்ப அவரை பரிந்துரைத்திருக்கிறார். இதுவே சாதாரண மனிதர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உள்ள வேறுபாடு. இதை புரிந்து கொள்ள சிந்திக்க தெரிய வேண்டும் அல்லது தியானம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். ஜின்னா காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார். இப்போது காங்கிரஸ் எதிர்ப்பாளராகி விட்டார். முஸ்லீம் மக்களுக்கு காங்கிரஸ் ஒன்றும் செய்யாது என்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் முஸ்லீம் மதம் என்றவர் முஸ்லீம் இனம் என்று ஒன்று சேர்க்க திட்டமிடும்போது. பலூசிஸ்தானையும் இணைத்துக் கொள்ள நினைத்தார். பலூச்சிகளோ முஸ்லீமாக இருந்தாலும் தாங்கள் தனி இனம் என்று சொன்னவர்கள் அல்லவா? இப்போது ஜின்னாவையே நீ வேறு நான் வேறு என்று கூறிவிட்டார்கள். ஒரு வழியாக தலைப்பு இடம் பெற்றுவிட்டது. ஜின்னா சும்மா இருப்பரா? பாபநாசம் நடராஜன்
😢 1

Comments