Para
June 12, 2025 at 08:16 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம், எவ்வளவு கோபம் இருந்திருந்தால் 133 ஆண்டு பழமை வாய்ந்த மாளிகை 1948 லிருந்து ஜின்னாவின் நினைவு இல்லமாக இருந்தது. நினைவு இல்லத்தை தாக்குவார்கள் என்று பாகிஸ்தான் சிறிதும் எதிர்பார்த்திருக்காது. ஜின்னா பாகிஸ்தானியருக்கு தேசத் தந்தை பலூச்சிகளை பொறுத்தவரை துரோகம் இழைத்தவர். ஜின்னா முஸ்லீம்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முனைந்தபோது கூட அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கிலாட் உடனான நட்பைப் பயன்படுத்தி பலூச்சிகளுக்கு நன்மை செய்வது போல் காட்டிக் கொண்டு வலுக்கட்டாயமாக பலூசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைத்து விட்டார். அந்த கோபம் பலூச்சிகள் மனதில் வழி வழியாக வந்ததன் விளைவுதான் போராட்டம். பலூச்சிகளின் போராட்டத்தின் நியாயம் பாகிஸ்தானியருக்கு தெரிந்து கொள்ள விட வில்லை. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்து வாங்கியவருக்கு பலூச்சிகளின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் மத உணர்வு மறைத்து விட்டதா? பாபநாசம் நடராஜன்
👍 💯 😮 4

Comments