Para
June 13, 2025 at 05:30 AM
பஞ்சாபி உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்வதே, இறுதியில் அவர்கள் தரும் இனிப்புகளின் தரத்துக்காகத்தான். ஆனால் இந்த குரோம்பேட்டை Pind இல் மட்டும் எப்போதும் இழவு வீட்டு எள்ளுப்பொடி போல ஒன்றைக் கிண்டிக் கொண்டு வந்து வைத்து மூங்கு தால் அல்வா என்கிறான். வாயில் வைக்கச் சகிக்கவில்லை. கோலி அளவுக்கு உருண்டை பிடித்து வைத்துவிட்டு குலோப் ஜாமூன் என்கிறான். அது பாதி வெந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு போல இருக்கிறது. ஒன்றிய அரசு, ஊடுருவிய பங்களாதேசிகளைக் கண்டறிவது போலப் போலி பஞ்சாபிகளையும் இனம் கண்டு அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
Image from Para: பஞ்சாபி உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்வதே, இறுதியில் அவர்கள் தரும் இனி...
😂 ❤️ 👍 💐 😁 29

Comments