Para
June 13, 2025 at 05:45 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம், கலாட்டின் மன்னர் ஜின்னா மீது அளவற்ற நட்பும் அதீத நம்பிக்கையும் வைத்திருந்திருக்கிறார். தன் முயற்சியில் தளர்வடையாத விக்ரமாதித்தன் போல் மன்னர் கான் பிரிட்டிஷாருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். எந்த கடிதத்திற்கும் பதிலே வரவில்லையென்றாலும் பிரிட்டிஷ் பிரதிநிதி அதிசயமாக ஒரு கடிதம் எழுதிவிட்டார். ஒன்றும் பயப்படாதீர்கள் 1876 - ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி எல்லாம் அப்படியேதான் இருக்கும் என்று தைரியம் சொல்லிவிட்டு அந்த போலன் கணவாய் பகுதி மட்டும் பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு எழுதிவிட்டார். அந்த வழிதானே அவர்களுக்கு முக்கியம். இந்த சூழ்நிலையில் உலகப் போர் தொடங்கி பிரிட்டன் அதில் களமிறங்கி விட்டது. இந்தியர்கள் மீது போர் திணிக்கப்படுவதாக காங்கிரஸ் கருதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாகாண அரசு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தார்கள். ஜின்னா என்ன செய்வார்? காங்கிரஸ் எதிர்ப்பு எண்ணம் வேலை செய்தது. முஸ்லீம் லீக் போரை ஆதரித்தால் அதற்கு பிரதி உபகாரமாக பிரிட்டிஷார் தன் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து முஸ்லீம்கள் வாழும் பகுதியை தனி நாடாக பிரித்துக் கொடுப்பார்கள் என்று கணக்குப் போட்டார். பிரிட்டனை முஸ்லீம் லீக் ஆதரிக்கும் என்று அறிவித்துவிட்டார். முஸ்லீம் இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜின்னாவின் முடிவை கவனித்த பலூசிஸ்தான் அதுவும் பிரிட்டிஷாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தது. அதன் கோரிக்கை தங்களை எந்த நாட்டுடனும் இணைத்துவிடாமல் இருக்கும் நிலையில் விட்டுவிட்டால் போதும் என்பதுதான். ஜின்னாவும் அப்படியெல்லாம் நடக்காது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தார். பார்த்துக் கொண்டாரா? பாபநாசம் நடராஜன்

Comments