Para
June 13, 2025 at 03:55 PM
நீ வேறு, நான் வேறு அத்தியாயம் 20 வாசிப்பு அனுபவம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. பிரிட்டன் பலூசிஸ்தான் ஒரு தனி நாடு என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் பலவிதமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவும் கூட தலையை ஆட்டிவிட்டார். பலூசிஸ்தான் வேண்டும் என்று இல்லை, வேண்டாம் என்று கூட யாரும் நினைக்கவே இல்லை. ஆனாலும் பலூசிஸ்தானுக்கு விடுதலை கிட்டவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? எவ்வளவு யோசித்தாலும் புரியவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜின்னாவைப் போல பலூசிஸ்தானும் பிரிட்டனுக்குத்தான் ஆதரவு வழங்கியது. பலூசிஸ்தான் படை என்று ஒரு கூட்டமே கிளம்பிச் சென்றும் இருக்கிறது. பின் எங்கு பிழை ஏற்பட்டது? யாருக்கும் கிடைக்காத பிரிட்டன் அரசுக் கடிதம் கூட பலூசிஸ்தானுக்கு வந்ததே? ஒன்றுதான். நீங்கள் வேறு, நாங்கள் வேறு. அவ்வளவுதான் பலூசிஸ்தான் நிலைப்பாடு. ஆனால் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் அளவுக்கு பலூசிஸ்தான் மீது வரலாற்றுக்கு என்ன கோபமோ? அறிந்து கொள்ள இரண்டு நாள் காத்திருக்க வேண்டுமே? அதுவரை நாம் அமெரிக்கா பக்கம் போகலாம். சந்திப்போம் ஆசானே. சிகரம் பாரதி இலங்கை மலையகம்
👍 1

Comments