
Lankatamil
June 12, 2025 at 10:16 AM
கரையொதுங்கிய பிளாஸ்டிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்!
தீவுப் பகுதியின் கரையோரப் பிரதேசங்களுக்கு பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கிவருகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகம் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகாட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு (வ.கி) அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
நெடுந்தீவின் வெல்லை கடற்கரையில் இவை காணப்படுவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் இவை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
