
Lankatamil
92 subscribers
About Lankatamil
LANKA TAMIL MEDIA CORPORATION PRIVATE LIMITED is a dynamic and innovative media company that operates in the ever-evolving landscape of the entertainment and communications industry. With a strong focus on creativity, technology, and audience engagement, we strive to deliver compelling content across various platforms.
Similar Channels
Swipe to see more
Posts

பாகிஸ்தான் ஆதரவு வட்ஸ்எப் குழு! பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதன் போதே, 'ஒப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப் ' குழுக்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள, எப்.ஐ., எனப்படும், 'பொப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தீவிரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


யாழில் வாள்வெட்டு! யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(13) இரவு இளைஞன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


புதிய தலைவர் நியமனம்! இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல் நிரோஷன அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால், நேற்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில், அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் இது தொடர்பான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


கை கால்களை கட்டி படுகொலை! நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நேற்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வென்னப்புவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவர் 64 வயதுடைய மாரவில, மூதூகட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சந்தேகநபர்களை கைது செய்ய வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


யாழ். வரும்- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, அவர் யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். அத்துடன், இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்வார் என்று தெரியவருகின்றது. இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆதலால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் யாழ்ப்பாணம் வருகின்றமை முக்கியத்துவம் மிக்க விடயமாகப் பார்க்கப்படுகின்றது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


வீட்டின் கூரைகுள் விழுந்த பேருந்து! மலுல்ல பகுதியில் அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்! தற்போதையை வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவியுடன், பறக்கும் கார் என்பது நிஜ உலகில் சாத்தியமாக உள்ளது. சீனாவை சேர்ந்த Chery நிறுவனம், அதனது முதல் பறக்கும் காரை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 2024 ஒக்டோபர் மாதம் இந்த காரின் ப்ரோட்டோடைப் மாடலை வெளியிட்ட Chery, 80 கிமீ தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றதாக அறிவித்தது. “இந்த காரானது ஆடம்பர காராக இல்லாமல், நடுத்தர மக்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதே இலக்கு” என Chery நிறுவன இயக்குநர் Wang Junjie தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள், சீனாவில் வீடுகளிலோ அல்லது விமான டாக்ஸிகளாக 100,000 eVTOLகள் இருக்கலாம் என்று 2024 நவம்பரில் சீனா பொருளாதார கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


10 நாட்களுக்கு பூட்டு! அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான வீதி இன்று (14) முதல் ஜூன் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக குறித்த வீதி சாலை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக செல்லும் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் சாலையைப் பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிவித்தல்! மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளமையினால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான விமானங்களுக்கான விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் 1979 , 94 11 777 1979 அல்லது 94 74 444 1979 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


ஹட்டனில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு .! ஹட்டன் நகரில் சைட் வீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணையில் ஹட்டன் மற்றும் நோர்வூட் பொலிஸார் அதனை நோர்வூட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டு, சந்தேக நபரொருவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில், தேடல் நடவடிக்கைகள் தொடருகின்றன. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
