Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 11, 2025 at 03:17 PM
*💥 எடப்பாடி பழனிசாமிக்கு ஈகோ தான் பெரிதா? முறுக்கிக் கொண்டு நிற்பது சரியா?* 2024 தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தேவையே இல்லை. ஆனாலும் கமல் என்ற ஒற்றை நபர் கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டார் ஸ்டாலின். ஆனால் தேர்தலில் சீட் கொடுக்க முடியாத நிலையில் ராஜ்யசபா எம் பி பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அதை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார் ஸ்டாலின். அதிகபட்சம் 2 சதவிகித வாக்குகளை வைத்திருக்கும் கட்சிக்கு ராஜ்யசபா சீட் என்பதெல்லாம் அதீதம் என்றாலும், கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கிறார். ம நீ ம இல்லையென்றாலும் வெற்றி உறுதி என்ற நிலையிலும் இதை செய்திருக்கிறார் என்பது தான் இங்கே முக்கியமாக பார்க்க வேண்டியது. ஆனால் எடப்பாடியோ இன்னும் வெற்றி உறுதி ஆகாத நிலையில், கூட்டணி உறுதி ஆகாத நிலையில், ஆணவத்துடன் செயல்பட்டு தேமுதிகவுக்கு கொடுப்பதாக சொன்ன ராஜ்யசபா சீட்டை தானே வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் எடப்பாடி முதல்வராக வேண்டுமென்றால் யார் யார் ஆதரவு கொடுக்க வருகிறார்களோ, அவர்களை அனைவரையும் அரவணைக்க வேண்டிய இடத்தில இருப்பவர் எடப்பாடி தான். சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இன்று எடப்பாடிக்கு தான் இருக்கிறது. இந்த கூட்டணிகளால் எடப்பாடிக்கு தான் அதிக பலன். அப்படி இருக்கும் போது யாரிடமும் இறங்கி போகமாட்டேன் என்று ஈகோ பிடித்து அலைவது திமுகவுக்கு தான் லாபமாக முடியப்போகிறது. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 அதிமுகவுக்கு கிடைத்த 2 ராஜ்யசபா இடங்களையும் தேமுதிகவுக்கு ஒன்று, பாமகவுக்கு ஒன்று என பிரித்துக் கொடுத்து கூட்டணியை உறுதி செய்திருந்தால், மிகப்பெரிய ராஜதந்திர முடிவாக பார்க்கப்பட்டிருக்கும். 2 ராஜ்யசபா எம்பிகளால் எடப்பாடிக்கு தம்படிக்கு பிரயோஜனமில்லை. அவருடைய அல்ட்டிமேட் கோல் முதல்வர் ஆவதே. அதை மனதில் வைத்து சிந்திக்காமல், மற்ற கட்சிகள் தான் இறங்கி வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு போல் காட்டிக் கொள்கிறார். இதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார் என்பது எடப்பாடி மட்டுமே அறிந்த ரகசியம். முதல்வராக இருந்த போதும் சரி, இன்றும் சரி பாஜக ஆட்சியின் எந்த ஒரு சாதனையையும் பற்றி எடப்பாடி பேசியதே இல்லை. மோடியை ஒருபோதும் புகழ்ந்தது இல்லை. இவர் புகழ வேண்டும் என்று மோடியும் தவம் கிடைக்கவில்லை. ஆனால் மோடியை முன்னிறுத்தி தனக்கான செல்வாக்கை உயர்த்தி கொள்வதும் ஒரு வகையான அரசியலே. திமுக இதில் மாஸ்டர்ஸ். 20 வருடங்களாக கோலம் மட்டுமே போட்டு கொண்டிருக்கும் ராகுல் காந்தியை கூட பிம்ப கட்டமைப்பு செய்து, மிகப்பெரிய ஆளுமை போல் முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள். ஆனால் 3 தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மோடியை பற்றி பேச எடப்பாடிக்கு கசக்கிறது. மோடியின் புகழ் தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்று திமுகவை விடவும் அதிகம் சிந்திக்கிறார் இருக்கிறார் எடப்பாடி. > அமித் ஷா பிளான்! Watch: https://youtu.be/YNEfttQrb1c உண்மை என்னவெனில் வரும் தேர்தலில் அதிமுகவை எதிர்கொள்ள திமுக கையில் எடுக்கபோவதே பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷம் தான். பாஜக எதிர்ப்பை நியூட்ரல் செய்யாமல் திமுகவை வெல்லவே முடியாது. எடப்பாடியும் முதல்வர் ஆகவே முடியாது. திமுக கையில் எடுத்திருக்கும் பாஜக எதிர்ப்பு அஸ்திரத்தை அதிமுக தான் முன்னின்று முறியடிக்க வேண்டும். அதற்கு பாஜக ஆட்சியின் சாதனைகளை எடப்பாடியும், அதிமுகவும் பேசியே ஆகவேண்டும். மோடியின் புகழை எடப்பாடி பாடியே ஆகவேண்டும். அப்படி இல்லையெனில் பாஜகவை பூச்சாண்டியாக காட்டியே மிகச்சுலபமாக தன்னுடைய குறைகளை மறைத்துக் கொள்ளும் திமுக. ஏனென்றால் திமுகவின் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அதிமுகவிடம் பதிலே இல்லை. ஒட்டுமொத்த ஊடகங்களும் திமுக பக்கம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அதிமுகவுக்கு இன்று இடமே இல்லை. கூட்டணிகளை சரிவர கையாளாமல் இருப்பது. திமுகவுக்கு எதிராக எந்த ஒரு அலையும் இல்லாமல் இருப்பது என எதுவுமே எடப்பாடிக்கு சாதகமாக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய ஈகோ தான் பெரிது என செயல்படுகிறார் எடப்பாடி. இந்தியாவின் சிறந்த முதல்வர்களின் ஒருவர் என போற்றப்பட்ட சந்திரபாபு நாயுடு இன்று மோடி புகழ் பாடுகிறார். எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட மோடியை பற்றி எப்போதாவது நல்லவிதமாக சில கருத்துக்களை சொல்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவை விட எடப்பாடி பெரிய தலைவரா? ஆனால் எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொள்கிறார். ஜெ இருந்தால் மோடி புகழ் பாடுவாரா? அதனால் நாமும் அதை செய்யக்கூடாது என்பது தான் எடப்பாடியின் எண்ணம். கட்சித்தலைமை அதை செய்தால் தானே கட்சி தொண்டர்களும் செய்வார்கள். எடப்பாடியின் ஈகோவால் தான் 2021 - ல் ஆட்சியை இழந்தார். 2024 - பாஜக கூட்டணி தொடர்ந்திருந்தால் இன்று சந்திரபாபு இருக்குமிடத்தில் எடப்பாடி இருந்திருப்பார். பவர்புல் மினிஸ்டரி கிடைத்திருக்கும். அதுவும் நடக்கவில்லை. எடப்பாடியின் இதே மனநிலை தொடர்ந்தால் திமுகவை வீழ்த்துவதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கூட வருவதற்கு தயாராக இருக்கும் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மதிக்காத எடப்பாடி, இனி ஒரு போதும் அதிமுகவுக்கு ஒட்டு போடாத சிறுபான்மையினர்களுக்காக ஏங்குகிறார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார். இப்போதிருக்கும் கூட்டணி தொடர்ந்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கூட ஸ்டாலின் இறங்கி போகிறார். இன்னும் ஒரு கட்சியை சேர்க்க முடியுமா என்று பேசுகிறது திமுக. ஆனால் எத்தனை கட்சிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய எடப்பாடி முறுக்கிக்கொண்டு நிற்கிறார். யாரிடமும் இறங்கி போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இதில் யார் வெல்வார்கள் என்பது சொல்லாமலே புரியும் . 2026 தேர்தலில் திமுக வென்றால் அதற்கு முழுமுதற் காரணமும் எடப்பாடியும், எடப்பாடியின் ஈகோவும் தான். நன்றி: மகாதேவன் சி.எம்.
👍 😂 😮 😢 21

Comments