கதம்பம்
கதம்பம்
June 13, 2025 at 01:37 AM
*இன்றுடன் தனது பணியை நிறைவு செய்யும் பெரிய தேர்...!!!* *சுமார் அரை ஆயிரமாண்டு காலம் அர்த்தநாரீஸ்வரரை சுமந்து வந்துள்ள* *திருச்செங்கோட்டின் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரர் தேர் இன்று நிலை சேருகிறது...* *அடுத்த ஆண்டு புதிய தேர் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்பதால்* *நமது அப்பா தாத்தா கொள்ளுத் தாத்தா எள்ளு தாத்தா ஆகியோர் வடம் பிடித்து இழுத்த மிகப் பழமையான தேர்* *உலகத்தில் நான்காவது பெரிய தேராக போற்றப்படும் இந்த பழமையான தேர்* *இன்று நிறைவாக இறைவனை சுமக்கிறது என்று நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...* *இந்த புனித மிகப் பெரிய தேருக்கு திருச்செங்கோடு வாழ் பொதுமக்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன் ...* *476 ஆண்டுகள் அர்த்தநாரீஸ்வரரை சுமந்த* *திருச்செங்கோட்டில் பெரிய தேர்* *இன்று தனது பணியை நிறைவு செய்கிறது...* *அடுத்த வருடம் புதிய தேரில் அம்மையப்பர் பவனி வருகிறார்...* *இன்று நிலை சேரும் அம்மையப்பன் தேர் ஏறத்தாள 476 வருடங்களுக்கு மேல் திருச்செங்கோடு நகரின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பெருமை சேர்த்தது...* *நம்மை, நமது நகரை பெருமைப்படுத்திய இன்றைய தேரை என்றும் மறக்க மாட்டோம்* *நன்றியுடன் விடையளிப்போம்* 🙏🙏🙏🛕🛕🙏🙏🙏
🙏 👍 ❤️ 🤍 11

Comments