
TV9 Tamil
June 12, 2025 at 02:28 PM
அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த 40 வயதான விஷ்வாஸ் குமார் ரமேஷ் உயிர் தப்பியுள்ளார். இரத்த காயங்களுடன் அவர் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஷ்வாஸ் குமார் கூறுகையில், “மேலே எழும்பிய சில நொடிகளில் பலத்த சப்தம் கேட்டதுடன் விமானம் கீழே விழுந்தது. நான் கண் விழித்து பார்க்கும்போது, சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. பயத்தில் எழுந்து ஓடினேன்” என்றார்.