DMK IT Wing

158.9K subscribers

Verified Channel
DMK IT Wing
June 16, 2025 at 11:25 AM
தொல்லியல் அரசியல் மலை சார்ந்த சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் போதோ அல்லது சுற்றுலா சார்ந்த எந்த இடத்திற்குச் சென்றாலும், தங்கள் பெயர்களை பதித்து வைப்பதை பார்த்திருப்போம். எல்லோருக்கும் அந்த தன்னுணர்வு உண்டு. அதற்கு காரணமும் கூட ஒரு மரபு வழி தொடர்ச்சி தான். வீட்டுச் சுவர்களும் கூட எழுதிப்பழகும் பெரிய சிலேடுகள் தான். மனிதன் தனது எண்ண ஓட்டத்தை மண்ணாலான ஓடுகளிலும், மரப்பட்டைகளிலும் முதலில் எழுதிப் பழகினான். உலகோங்கள் கண்டறிந்த பிறகு கருவிகள் கண்டுபிடித்து செம்பு ஏடுகளில் எழுதினார்கள். எழுதுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக கண்டறிந்தாலும் கல்லில் எழுதி மகிழும் குணம் இன்று வரை மாறவில்லை. உலக மற்றும் இந்திய மொழிகளில் மிகவும் தொன்மையானது தமிழ். தொன்மையான தமிழ் எழுத்துக்கு தமிழி என்று பெயர். கி.மு. 3 முதல் கி.பி 3 வரை இருந்த எழுத்து தமிழி தான். தமிழ் பிராமி என்பதெல்லாம் தவறான திணிப்பு. இந்திய மொழிகள் அனைத்தும் நாகரி, திராவிடி, கரோஷ்டி என்ற மூன்று எழுத்து வகைகளுக்குள் அடங்கும். கி.பி 4 ம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்திற்கு வந்த வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் தமிழியிலிருந்து உருவானது தான். சமஸ்கிருத எழுத்துகளான ஷ,ஸ,ஜ,ஹ,ஸ்ரீ தமிழில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு கிரந்த எழுத்து என்று பெயர். கல்வெட்டுகளின் முக்கியத்துவம் யாதெனில் அது கற்பனைகள் அல்ல. அனைத்தும் ஆவணங்கள். எனவே அரசியல்,சமூக,பொருளாதார, இலக்கியங்களை அறிய, கல்வெட்டு பெரும் ஆதாரமாக உள்ளது. கல்வெட்டுகளே அந்தந்தக் கால வரலாறுகளை அறிய உதவுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்வெட்டுகள் கோவில்களிலும், பாறைகளிலும், குகைகளிலும், நீர் நிலைகளிலும் காணப்பட்டன. இந்தியத் தொல்லியல் துறை கி.பி.1885 ல் தொடங்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் படியெடுத்து பதிப்பிக்கும் பணி செய்யப்பட்டாலும் துரித வேகத்தில் நடைபெறவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகள் தான். எனவே தான் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இங்கு கல்வெட்டுகள் அதிகமாக கிடைத்ததற்கு புவியியல் ரீதியான மற்றொரு காரணமும் உண்டு. தென்னிந்தியப் பாறைகள் இரும்பு உளி கொண்டு தாக்கும் அளவுக்கு மிகவும் கடினமானவை. வட இந்தியப் பாறைகள் மென்மையானவை. எனவே நான்கில் மூன்று பங்கு கல்வெட்டுகள் இங்கேயே கிடைத்தன. உலகில் உள்ள மூத்த ஐந்து மலைகளுள் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை. காலத்தால் முந்தையது. இதன் காரணமாகவே இங்கு ஏராளமான இயற்கை வளங்கள் பொதிந்திருக்கிறது. எனவே ரகசியம் என்ற பொருளில் பொதிகை மலை என்றார்கள். பொதிகை என்றால் பொதிந்து இருப்பது என்றே பொருள். ரகசியங்களின் ரகசியமே மேற்குத்தொடர்ச்சி மலை கல்வெட்டுகளை நகலெடுத்து பதிப்பிக்கும் பணிக்கு ஒருவரைக் கூட ஒன்றிய அரசு நியமிக்கவில்லை என்று தற்போது தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் எழுந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India-ASI) ஆரிய சர்வே துறையாக மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது. அவர்களிடமிருந்து கல்வெட்டுகளையும், தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மத்தையும் காக்க வேண்டியது நமது கடமை. மதுரையில் கீழடியின் தொன்மத்தை இந்திய ஒன்றிய அரசு அங்கீகரிக்க வலியுறுத்தி 18-06-25 நடைபெறும் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
👍 🙏 ❤️ 👌 💦 🔥 62

Comments