DMK IT Wing
June 18, 2025 at 07:24 AM
*கீழடி தமிழர் வரலாற்றை மறைக்க முயலும் பாஜகவின் சதி*
_// தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படிக்கவும்//_
தமிழர் பண்பாட்டின் பழைமையை மறைத்து இந்திய நாட்டின் பண்பாடு என்பது ஒன்றே ஒன்று தான் அது வட இந்திய ஆரிய பண்பாடு தான் என்பதை நிறுவ பாஜக அரசு பெரும் சதி வேலைகளை செய்து வருகிறது. ஏற்கனவே சிந்துவில் கிடைத்த கருப்பு சிவப்பு பானைகள், திமில் உள்ள காளைகள், முது மகள்ள தாழிகள் முதலானவை அங்கு வாழ்ந்தது தமிழ் மூதாததைகள் தான் என்பதை உறுதி செய்தது. ஆனால் அந்த உண்மை வெளிப்பட்டால் ஆரிய வருகைக்கு முன்னமே தமிழர் சிறப்பான பண்பாட்டை கொண்டிருந்தனர் என்ற வரலாலற்று உண்மை உலகிற்கு தெரியவரும் என்று எண்ணிய பாஜக அரசு அங்கு கிடைத்த திமில் உள்ள நமது காங்கேயன் காளையை குதிரையாக மாற்றி பதியவைக்க முயற்சி செய்து கொண்டுள்ளது. அதோடு இல்லாத சரஸ்வதி நதி பூமிக்கு அடியே ஓடுவதாகவும் அதை கண்டறிய பல கோடி செலவிடுவதாகவும் கூறி மக்களை மடைமாற்றியது.
என்னதான் பாஜகவும் ஆரிய சங் பரிவாறும் முயன்று மூடி வைத்தாலும் தமிழர் பண்பாடு தான் பழமையானது என்ற உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அதற்கு சாட்சியாக இருப்பது தான் கீழடி. முதல் நான்கு கட்ட அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகளே உலகை ஆச்சர்யப்பட செய்துள்ளன.
இந்த அகழாய்வு, சங்க காலத்தைச் சேர்ந்த (கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை) நகர நாகரிகத்தின் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது. கீழடி அகழாய்வு, தமிழர்களின் பழமையான எழுத்தறிவு, பண்பாடு, மற்றும் வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. கார்பன் டேட்டிங் மூலம் இங்கு கிடைத்த பொருட்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு வரை பழமையானவை என உறுதியாகியுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டு அதாவது (சுமார் 2600 வருடங்களுக்கு முன்பே) முதிர்ச்சியடைந்த நகர நாகரிக்கத்தோடு தமிழர்கள் வைகை நதியோரம் வாழ்ந்துள்ளனர். எழுத்தறிவு, கல்வியறிவு , வணிகத்தொடர்பு கொண்ட நாகரீக சமூகமாக நம்மக்கள் இருந்துள்ளனர்.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், தமிழர்களின் வாழ்வியல், கைவினை, வணிகம், மற்றும் எழுத்தறிவைப் பிரதிபலிக்கின்றன. அங்கு கிடைத்த பொருட்களை அறிவியல் முறைப்படி பகுப்பாய்வு செய்த போது அவை எல்லாம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
*கீழடியில் கிடைத்தவை:*
*கட்டுமானப் பொருட்கள்* :
செங்கற்கள், சுண்ணாம்பு, கூரை ஓடுகள், மற்றும் சுடுமண்ணால் ஆன உறைகிணறு பூச்சுகள். இவற்றில் சிலிக்கா, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இருப்பது வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டது.
மெல்லிய களிமண்ணால் ஆன தரைத்தளங்கள் மற்றும் இரும்பு ஆணிகள், இவை கட்டுமானத் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டைக் காட்டுகின்றன.
*உலோகப் பொருட்கள்:*
இரும்பு ஆயுதங்கள் (அம்பு முனைகள், எழுத்தாணிகள்), செம்பு மற்றும் தங்கப் பொருட்கள், மற்றும் வெள்ளி முத்திரைக் காசுகள்.
200 கிராம் எடையுள்ள இரும்பு பொருட்கள், இவை பண்டைய தமிழர்களின் இரும்பு பயன்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.
தாமிரத்தால் ஆன கண் மை தீட்டும் கம்பி மற்றும் செம்பு கம்பி.
*மட்பாண்டங்கள்:*
கருப்பு-சிவப்பு, சிவப்பு, மற்றும் கருப்பு நிறப் பானை ஓடுகள், ரோமானிய முத்திரையிட்ட பானை ஓடுகள், மற்றும் அரிட்டேன் பானை ஓடுகள்.
தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், இவற்றில் "ஆதன்", "குவிரன் ஆதன்", "உதிரன்", "சந்தன்" போன்ற பெயர்கள் காணப்படுகின்றன.
1,001 பானை ஓடுகளில் கீறல் குறியீடுகள் மற்றும் வடிவங்கள்.
*அணிகலன்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள்:*
தங்க அணிகலன்கள், பச்சை, மஞ்சள், நீல நிற கண்ணாடி மணிகள், அகேட், சூது பவளம், மற்றும் பளிங்கு மணிகள்.
யானை தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள், வட்டச்சில்லுகள், மற்றும் சதுரங்கப் பொருட்கள்.
13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், மற்றும் 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள்.
*வேறு பொருட்கள்:*
கால்நடை எலும்புகள், எடைக் கற்கள், முத்திரைகள், மற்றும் நூல் நூற்கும் தக்களிகள்.
சுடுமண் முத்திரை கட்டைகள், பழங்கால செங்கல், மற்றும் மனித உருவம் கொண்ட சுடுமண் சிற்பங்கள்.
*இரும்பு ஆலை*
கீழடி அகழாய்வில், இரும்பு உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான முக்கியமான சான்றுகள் கிடைத்துள்ளன, இவை பண்டைய தமிழர்களின் உலோகவியல் திறனை வெளிப்படுத்துகின்றன:
*தொழிற்கூட அமைப்பு:*
கீழடியில் 13 அடி நீளமுள்ள ஒரு தொழிற்கூட அமைப்பு கண்டறியப்பட்டது, இது நெருப்பு மூலம் இரும்பு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இதற்கு அருகே கருப்பு நிற சாம்பல் துகள்கள் காணப்பட்டன, இவை இரும்பு உருக்குதல் செயல்பாட்டின் எச்சங்களாகக் கருதப்படுகின்றன.
*இரும்பு பொருட்கள்:*
இரும்பு ஆயுதங்கள், அம்பு முனைகள், எழுத்தாணிகள், மற்றும் ஆணிகள் கிடைத்துள்ளன. இவை வீடு, விவசாயம், மற்றும் வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டவை.
200 கிராம் எடையுள்ள மூன்று இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன, இவை பண்டைய தமிழர்களிடையே இரும்பு பயன்பாடு பரவலாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக இரும்பின் பயன்பாடு அப்போதே சிறப்பாக இருந்ததோடு மட்டுமல்லாது இரும்பு உருக்கு ஆலை வைத்து நடத்தும் அளவு உயரிய சமூகமாக நமது தமிழ் சமூகம் இருந்துள்ளது.
வட இந்திய ஆரியர் குதிரை மேய்த்து கொண்டு நாடோடியாக திரிந்த காலத்தில் நாம் நகரம் அமைத்து மேம்பட்ட நகரிக்கத்தோடு வாழந்துள்ளோம். இந்த உண்மை எல்லாம் உலகிற்கு தெரியவந்தால் இதுவரை ஆரிய நாகரிகம் தான் உயர்ந்தது சிறந்தது என்று புளுகிய புளுகு வெளிப்பட்டு விடும் என அஞ்சி அறிவியல் உண்மையையே ஏற்க மறுக்கிறது பாஜக. அதோடு கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.
கீழடி நமது தாய்மடி. . அந்த உண்மையை உலகிற்கு உணர்த்துவது தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
ஒரு தமிழனாய் இதை செய்வோம் குறைந்த பட்சம் இந்த தகவலையாவது அதிகம் பகிர்வோம்.
*வாழ்க தமிழ் .!* *வாழ்க தமிழர் பண்பாடு!!*
👍
❤️
🙏
❤
🌅
👌
64