Erode Kathir
Erode Kathir
June 17, 2025 at 05:05 AM
சரியில்லாத இடத்தில், நிலையில், உறவுகளில் மற்றும் பொருளாதார சூழலில் இருந்து கொண்டு, ’தனக்கு நிகழும் எல்லாமும் சரியாக மட்டுமே இருக்க வேண்டும்!’ என நினைப்பதில் எந்த நியாயமும் இல்லை. முதலில் சரி செய்ய வேண்டியது, அந்த இடம், நிலை, உறவு மற்றும் பொருளாதார சூழல்தான். சரியில்லாத ஒன்றை, சரி செய்வது எல்லா நேரங்களிலும் அத்தனை எளிதானது அல்ல. அவற்றைச் சரி செய்ய தொடர் உழைப்பு, தெளிவான திட்டமிடல், காத்திருக்கும் மனோபாவம் மற்றும் நிலைத்த பொறுமை தேவை. அவை சரியாகும்பட்சத்தில், நிகழ்கின்றவைகளும் சரியானவைகளாக இருக்கலாம், நிகழ்கின்றவற்றை சமாளிக்கும் வல்லமையும் கிடைத்துவிடும். ~ ஈரோடு கதிர்
❤️ 👍 🌱 👌 💜 💯 🙏 🩷 31

Comments