⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 19, 2025 at 01:25 PM
**நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து** **அவசர தேவைக்கு பணம் வேண்டுமா? நித்திகா தேவதையை 3 முறை இப்படி கூப்பிடுங்கள். நீங்கள் கேட்கும் பணம் உங்கள் கையில் இருக்கும்.** எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், அவசர தேவைக்கு நாம் எல்லோருக்குமே இந்த பண பற்றாக்குறை ஏற்பட்டு விடும். எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வந்து சிக்கிக்கொண்டால் பணம் போதவில்லை என்ற நிலமை தான். கையில் பணமே இல்லை. ஆனால் பூர்த்தி செய்ய வேண்டிய பண தேவைகள் நிறைய இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த ஒரு மாதத்திற்குள் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும். அப்போதுதான் என்னுடைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியும். பிள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியும். கடனை திருப்பி அடைக்க முடியும். வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியும். மளிகை பொருட்கள் வாங்க முடியும். இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த ஒரு லட்ச ரூபாய் பணம் எப்படி இந்த பிரபஞ்சத்திடம் இருந்து நாம் பெறுவது. இதுபோல சூழ்நிலை நமக்கு தினம் தினமோ, மாத மாதமோ இருக்கப் போவதில்லை. நேரம் காலம் சரியில்லை ஏதோ கஷ்டத்தில் சிக்கி விட்டோம். பணம் முடக்கம் எனும் போது தான் வரும் அல்லவா. அப்போது நித்திகா தேவதையை கூப்பிட்டுக் கொள்ளுங்கள். அவசர பண தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக. **நித்திகா தேவதை வழிபாடு** அவசர நிதி பற்றாக்குறையை சரி செய்யக்கூடிய தேவதை தான் நித்திகா தேவதை. மகாலட்சுமி, அஷ்டலட்சுமிகள் குபேரர் போன்ற பணம் தரும் தெய்வங்களும், பணம் தரும் தேவதைகளும் ஒன்றா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. தெய்வங்கள் என்பது வேறு. கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் என்பது வேறு. அந்த வகையில் பார்த்தால் இன்று நாம் செய்யக் கூடிய வழிபாடு ஒரு பணம் தரும் தேவதையின் வழிபாடு. இந்த வழிபாடு செய்ய விளக்கு ஏற்ற வேண்டும், சுத்தபத்தமாக இருக்க வேண்டும், அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பண கஷ்டம் வரும்போது இந்த தேவதையை மூன்று முறை பெயர் சொல்லிக் கூப்பிட்டு, உங்களுடைய கஷ்டங்களை ஒரு அம்மாவிடம் சொல்வது போல சொல்லி இவ்வளவு பணத்தை மட்டும் எனக்கு கொஞ்சம் ஏற்பாடு செய்து கொடு என்று கேட்டுப்பாருங்களேன். அந்த நிதிக்கா தேவதை நீங்கள் கேட்ட பணத்தை உடனே கொண்டு வந்து உங்கள் கையில் சேர்த்து விடுவாள். சில இடங்களில் எல்லாம் பணம் கொடுத்து நாம் ஏமாந்து இருப்போம் சீட்டு போட்டு ஏமாந்து இருப்போம். இன்று தருவதாக பணத்தை நாளை தருவதாக சொல்லி ஏமாற்றிக் கொண்டே வருவார்கள். அந்த சமயத்தில், இந்த தேவதையை அழைத்து ஏமாந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கும் வேண்டுதல் வைக்கலாம். எப்படி தெரியுமா? தடைப்பட்ட நிதி நிலைமை சீராக, ஏதோ ஒரு இடத்தில் சிக்கி இருக்கும் பணம், நம் கையை வந்து சேர இந்த வழிபாடு வழிவகுக்கும். அந்த தடையை உடைக்க கூடிய வேலையை நித்திக்கா தேவதை அவர்கள் நமக்காக செய்து கொடுப்பார்கள். இப்படி ஏதோ ஒரு பண சிக்கல் உங்களிடம் இருக்கிறது. அந்த தடையை உடைக்கணும் உடனடியாக நாளையோ அதற்கு மறுநாளோ எனக்கு பணம் தேவைப்படுகிறது எனும் பட்சத்தில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து “நித்திகா தேவதையே என்னுடைய நிதி நிலைமையை சரி செய்து வை. எனக்கு அவசரமாக ஒரு லட்சம் தேவைப்படுகிறது. என்னுடைய பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். மருத்துவ செலவு இருக்கிறது. இதற்கு உண்டான பணத்தை என் கையில் எப்படியாவது கொண்டு வந்து சேர்த்து விடு”. இதுபோல உங்களுடைய தேவையை, இந்த நித்திகா தேவதையிடம் சொல்லி கண்களை மூடி கற்பனையில், அந்த தேவதை உங்களை நோக்கி வருவதுபோல பணத்தைக் கொண்டு வந்து உங்கள் கையில் தருவது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பிறகு “நித்திகா நித்திக்கா நித்திக்கா” என்று 27 முறை பொறுமையாக அந்த தேவதையின் பெயரைச் சொல்ல வேண்டும். இவ்வளவுதான். இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. அவசர பண தேவைக்கு பணம் கட்டாயம் உங்கள் கையை வந்து சேரும். https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த தேவதை உங்களுக்கு உதவி செய்வாங்க. அவசர நிதி நிலைமையை பற்றாக்குறையை சரி செய்ய இந்த மெத்தடை யார் வேண்டுமானாலும் ட்ரை பண்ணி பார்க்கலாம். நம்பிக்கை இருந்தால் மட்டும். கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்பி நீங்கள் செய்யும் போது அதில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கை இருந்தா ட்ரை பண்ணுங்க. நம்பிக்கையில்லா நிச்சயமா ட்ரை பண்ணாதீங்க. நல்லதே நடக்கும் மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களுடன் நமது சிவசக்தி ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.👇 https://primetrace.com/group/2243661/post/1157217338?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

Comments