Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 02:31 AM
🦉இதே ஜூன் 20.,., 1756 இந்திய வரலாற்றில் ஒரு துயரமான நிகழ்வு அரங்கேறியது. வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தவ்லாவின் படைகள், கல்கத்தா கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, 146 ஆங்கிலேயப் போர் வீரர்களையும் பொதுமக்களையும் ஒரு சிறிய, காற்றோட்டமற்ற சிறைக்குள் அடைத்தனர். 'கல்கத்தாவின் கருந்துளை' (Black Hole of Calcutta) என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறையில், ஒரே இரவில் மூச்சுத்திணறல், வெப்பம் மற்றும் தாகம் காரணமாக 123 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதுடன், பிளாசிப் போர் (1757) நிகழ்வதற்கும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளமிடுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. இது ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆதிக்கத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. விரிவாக அறிய; https://www.aanthaireporter.in/calcuttas-black-hole-tragic-day-it-was-a-terrible-night/
Image from Aanthai Reporter News Channel: 🦉இதே ஜூன் 20.,., 1756    இந்திய வரலாற்றில் ஒரு துயரமான நிகழ்வு அரங்கே...

Comments