Para
June 14, 2025 at 04:26 PM
முந்நூற்று எண்பது பக்கப் புத்தகம் ஒன்றை நான்கு நாள்களாகப் படித்து, இன்று நிறைவு செய்தேன். ஜின்னாவைப் பற்றிய புத்தகம். முந்நூற்று எண்பது பக்கங்களில் ஓரிடத்தில்கூட பலூசிஸ்தான் என்ற சொல் இல்லை. கலாட் அரசு பற்றிய குறிப்பில்லை. ஜின்னாவை நம்பி நாசமாய்ப் போன மிர் அஹமத்யார் கான் பற்றி ஒன்றுமில்லை. ஜின்னாவை ஒரு தேசியவாதியாகவும் மதச்சார்பின்மையின் காவலராகவும் முன்னிறுத்தும் அரிய வகை ஆராய்ச்சி நூல். என் நேரம். சனி தசையில் சுக்கிர புக்தி கலக்குமானால் இப்படித்தான் ஆகும் போலிருக்கிறது.
😂 😮 👍 😢 ❤️ 🫢 20

Comments