Anbil Mahesh Poyyamozhi
                                
                            
                            
                    
                                
                                
                                June 13, 2025 at 10:16 AM
                               
                            
                        
                            தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.
பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களைப் பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம்.
பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, ‘விரைவில் ஆய்வகம் அமைத்துத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என உறுதியளித்தோம்.
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        42