
Rj Chandru Report
3.3K subscribers
About Rj Chandru Report
News Update, Travel Vlogs & Comedy Videos
Similar Channels
Swipe to see more
Posts

பாணந்துறை மின்சார உப நிலையத்தில் மின்கம்பி மீது குரங்கு விழுந்ததால் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

தேசிய மின் கட்டமைப்பு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவிப்பு

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது - எரிசக்தி அமைச்சகம்

நாட்டில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது - இலங்கை மின்சார சபை

தேசிய வைத்தியசாலை (கொழும்பு), அம்பத்தளை குடிநீர் பரிசுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஒளி மின்சார அமைப்புகளை (rooftop solar systems) பயன்படுத்துபவர்கள், இன்று பிற்பகல் 4 மணி வரை அவற்றை தேசிய மின்சார வலையமைப்பில் இருந்து துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். • மின்சக்தி அமைச்சர்

நாட்டில் சுமார் 50% பகுதிகளுக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது. ஏனைய பகுதிகளுக்கான விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்குத் திரும்பும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர்

Norochcholai நிலக்கரி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பல பகுதிகளில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களுக்கு விநியோகத்தை மீள வழங்குவதற்காக அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - பொது முகாமையாளர் CEB-

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கான காரணங்களை கண்டறிய விசாரணை நடத்தப்படவுள்ளது -இலங்கை மின்சார சபை

முக்கிய அறிவித்தல்கள் Power Cut | Rj Chandru Report https://youtu.be/Djzw4VumGtU

மினுவாங்கொடை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.