
Our Temples Our Pride Our Right
951 subscribers
About Our Temples Our Pride Our Right
Shri Rama Sevaks assemble here
Similar Channels
Swipe to see more
Posts

எங்கே போயிற்று ரூ. 27,45,08,300. தமிழக பாஜக பதில் சொல்லுமா? இன்று திருப்பரங்குன்றத்தில் இந்துக்களை சூறையாடி விரட்டப் பார்க்கின்றனர் என்று @HRajaBJP போன்ற "இந்து போராளிகள்" கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஏனோ, 2022ல் நான் பதிவிட்ட இந்த வேதாரண்யம் குறித்த விஷயத்தினை பற்றி இன்றுவரை ஒரு வார்த்தை பேசவில்லை?! 2495.95 ஏக்கர் உப்பளத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 4200 மட்டும் குத்தகையாக கொடுக்கும் மத்திய அரசு இந்துக்களின் முதுகில் குத்தவில்லையா? அவர்கள் சொத்தை சூரையாடவில்லையா!! சில பாஜக பக்தர்கள் இங்கே வந்து ஆ, ஊ என்று வலிப்பு வந்தது போல் கத்திக் கொண்டிருக்கின்றனர். முருகனுக்கென்றால் உயிரை கொடுப்போம் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். உணர்சசி வெள்ளம் பொங்கிக் கொண்டிருக்கிறது!! ஆனால் அந்த முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமானின், வேதபுரீஸ்வரரின் 2495.95 ஏக்கரை மத்திய அரசு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரை ஆண்டொன்றுக்கு ரூ. 4200 மட்டும், அதாவது இன்றளவு மொத்தமாக ரூ. 3,27,600 மட்டுமே கொடுத்திருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு ஏக்கர் உப்பளம் குறைந்தபக்ஷமாக ஆண்டொன்றுக்கு ரூ. 10000 என்று வைத்துக் கொண்டால் கூட, 2014லிருந்து இன்றுவரை ரூ. 27,45,54,500 கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு கொடுத்ததோ ரூ. 46,200 மட்டுமே!! எங்கே போயிற்று ரூ. 27,45,08,300 (குறைந்தபக்ஷம்). சிவன் சொத்து................................................................. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் சொல்வர், பெருமானின் சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருப்பது மட்டுமல்ல, அதை கண்டும் காணாமல் இருப்பதும் கூட பகவதபசாரம் என்று. யார் யாரெல்லாம் 3வது கட்சியோ, அல்லது, "அதெல்லாம் கிடையாது! நீ யார் சொல்ல" என்று அதையும் ஏற்காத கட்சியினரோ, அவர்கள் தலையெழுத்து அவர்களுடையது. நம்மால் மாற்ற இயலுமா என்ன?

ஆர்பாட்டம் என்றால் ஆரவாரம் என்றும் வீண்பேச்சு நேற்று ஆர்பாட்டம் என்றால் என்ன என்று கேட்டிருந்தேன். அதற்கு பின்னூட்டம் இட்ட ஒருவர் கூட அதற்கான அர்தத்தை சொல்லவில்லை. ஏதேதோ அவர்களுக்கு தோன்றுவதை எழுதுகின்றனர். ஏன் என்பது புரியவில்லை. ஒருவர் அத்வானி என்கிறார், ஒருவர் காந்தி என்கிறார் ஒருவர் 1927 என்கிறார் ஆனால் ஒருவர் கூட ஆர்பாட்டம் என்றால் என்ன என்று சொல்லவில்லை. காரணம்?! என்ன படிக்கிறோம் என்ன சொல்கிறோம் என்ற நினைவே இல்லாமல் போனதுதான். தமிழ் நிகண்டுவை தேடினால் ஆர்பாட்டம் என்ற சொல்லுக்கான அர்த்தம் தெரிந்திருக்கும். அதிலே ஆர்பாட்டம் என்றால் ஆரவாரம் என்றும் வீண்பேச்சு என்றும் எழுதி இருக்கிறது. வீண்பேச்சு என்றால் என்ன என்று நமக்கு தெரியும்!! ஆரவாரம் என்றால்? கீழே பார்க்கவும்

சிந்திப்பீர் பசு வதை குறித்து சமூகவலைத்தளங்களில் ஆர்பாட்டம் (வீண் பேச்சு) செய்யும் சிலர், ஏன் மற்ற மிருக வதை குறித்து பேச மறுக்கின்றனர்?! இந்துத்துவா என்றால் பசுவதை தடை மட்டும்தானா?!! உயிர் கொலையை மொத்தமாக தடை செய்வதல்லவா சநாதன தர்மம்?! ஆனால் இந்த "போராளிகள்" ஏன் மற்ற வதைகளை (ஆடு, கோழி, பன்றி, வாத்து, முயல், மீன், காளை, எருமை முதலியன) எதிர்ப்பதே இல்லை?! சிந்திப்பீர்!!!

இந்த தமிழ்நாட்டு @BJP4TamilNadu பக்தர்களுக்கு இருக்கும் கொழுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அடுத்தவன் செய்ததில் ஸ்டிக்கர் ஒட்டுவதும், அவர்களை நியாயமான கேள்வியை கேட்டால் கேள்வி கேட்பவரை, அதுவும் களத்தில் செயல்படுபவரை, "நீ இதை செய்தாயா அதை செய்தாயா" என்று கேட்பதும், டிரால் செய்வதும், கேடுகெட்ட தனமான செயல்கள்!! இந்த கேடுகெட்ட கூட்டம்தான் பல பாஜக ஒட்டுதிண்ணைகளுக்கு நான் சிறையில் இருந்த போது என்னை பற்றி பேச கூடாது, எனக்கு ஆதரவாக பேசக்கூடாது என்று @karthikgnath போன்றவர்களை வாயை அடக்க வைத்தது. நன்றி கெட்டவர்களும் இப்ப என்னை அழைத்து, என் பேரை ஏன் உபயோகித்தீர்கள் என்று சொல்லி அழுவார்கள். பதவி இருந்தால் போதும், எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்ற நோக்கம் இருக்கும் வரை, இப்படிப்பட்டவர்களின் பெற்றோர்களின் நிலை கூட அபாயகரமானதுதான்!! ஒழுங்கு மரியாதையா ஐ.டி. டீம் இத போல கேடுகெட்ட டிரால்களை அடக்கவில்லை என்றால், இன்னும் என்னிடமிருந்து தீவிரமான தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு ஐ.டி. டீம் ஹெட் வேலை செய்வது உசிதம்

சந்தர்ப்பவாத அரசியல் ஆன்மீகர்கள் இன்று முருகனுடைய மக்காக ஆர்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகள் ஏன் மயிலை கபாலி கோவிலில் அந்த முருகனின் தாய் பார்வதி தேவியின் விக்ரஹத்தை, அதுவும் மயில் உருவில் உலகில் இருக்கும் ஒரே திருத்தலத்தில் இருந்து, அந்த மயிலை திருடி அதற்கு பதிலாக வாயில் பாம்பிருக்கும் முருகனின் மயில் வாகனத்தை வைத்து, 2004 லிருந்து இன்று வரை போலி மயிலுக்கு பூஜை செய்வதை குறித்து வாய் திறக்கவில்லை?!

மௌனம் ஏன்?! இன்று ஆர்பாட்டம் என்பவர்கள் அன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், கரூர் செல்லாண்டி அம்மன் கோவில், பாபினி பெரியநாயகி அம்மன் கோவில், நாமக்கல் மருதகாளி அம்மன் கோவில், மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில், கம்பரசன் பேட்டை சிவன் கோவில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோவில், தோளூர் சிவன் கோவில் என்று பல கோவில்கள் தரைமட்டமாக இடிக்கப்பட்ட போது வாய் திறக்காமல் இருந்தனர். இன்றுவரை திற்ககவில்லை. இது ஒரு சின்ன பட்டியல் தான்... இவ்வளவு ஏன்! சமீபத்துல காங்கேயம் காசி விஸ்வநாதர் கோவில், முருகருடைய தந்தை கோவிலில் இருந்து அத்தனை விக்ரஹங்களையும் கேடு கெட்ட துறை கைதிகளை பேருந்தில் ஏற்துவது போல கண்டவனெல்லாம் விக்ரஹத்தை எடுத்துச் சென்ற போது எங்கே போனது இவர்களின் குரல்?! அப்பல்லாம் குரல் குடுக்க முடியலையோ! கேவல அரசியல் செய்து பிழைக்க வெட்கமாக இல்லையே இவர்களுக்கு!! இது கேட்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. மேலே பட்டியலிட்டதை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேட்கிறேன். பின் குறிப்பு: ஏன் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருந்தனர் என்று எழுதலாம் என்று இருந்தேன். ஆனா பாருங்க இப்படி எழுதினா "ஏன் வாய மூடிக்கொண்டு இருந்தனர்" என்ற சாதாரண பொருள் இல்லாமல் கேவல பொருள் கொள்ளக் கூடிய கெவலமான ஜந்துக்கள் இங்கே சமூக வலைத்தளங்களில் பல உண்டு. அதனால அத எழுதல.