
U7news Tamil
166 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

*⚪️🔴மார்ச் 1ம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.* அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. மே மாதம் 19ம் தேதி பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதினின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், 3 மாத இறுதி காலத்திற்குள் நேரடி பணி நியமனம் இருக்கக் கூடாது என அரசின் விதி உள்ளது. தனக்கு ஆதரவான நபரை பதிவாளராக கொண்டுவர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

*⚪️🔴முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.* சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம். பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளது. 2025-26க்கான பட்ஜெட் மார்ச் 14 மற்றும் வேளாண் பட்ஜெட் மார்ச் 15இல் தாக்கல் செய்யப்படுகிறது.

*⚪️🔴 கோவை: அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை.* கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து சேர்த்ததாக FIR-ல் தகவல். கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. ஏற்கெனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2022 வரை எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 71.19% சொத்து சேர்த்துள்ளாதாக காவல்துறை தகவல்.

*⚪️🔴"இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு"* “அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டம் தொடரும்.. ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு” -தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் *இந்தி திணிப்பை எதிர்ப்போம்* “தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

*⚪️🔴நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.* காளியம்மாள் பிரகாசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன் தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான். அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை, கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன், என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த, களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும். உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன் என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம், எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.... நன்றி,வணக்கம், நாம் தமிழர்

⚪️🔴சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது.

*⚪️🔴உங்கள் பெயரில் போலி சிம் இருப்பதை அறிவது எப்படி?* 📍. முதலில் https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் 📍. ‘Useful Links’ஐ கிளிக் செய்யவும் 📍. அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் 📍. நீங்கள் பயன்படுத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், Captchaவை கொடுத்தால், OTP வரும். அதனை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் எண்கள் காட்டும் 📍. அங்கு சரிபார்த்து, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை ரிப்போர்டும் செய்யலாம்.

*⚪️🔴முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!* தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம் பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல்!

*⚪️🔴 பட்டாசு குடோனில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு.* தருமபுரி: கம்பைநல்லூர் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி. 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

*⚪️🔴"கண்ணு முக்கியம் பிகிலு..!”* ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல்போன் பயன்படுத்தினால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என ஆய்வில் எச்சரிக்கை! ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றின் ஸ்க்ரீன்களின் ஆபத்து குறித்து JAMA நெட்வொர்க் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளம் பருவத்தினர் வரை சுமார் 3.35 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மூளையை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை